Powered By Blogger

வியாழன், 13 அக்டோபர், 2011





அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மேல்மலையனூர்



ஒவ்வொரு அமாவாசை நாளன்று அம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் வைத்து ஆடவைத்து அம்மன் பாடல்கள் பாடப்படுகிறது. லட்சக்கணக்கானோர் அம்மனை தரிசிக்கின்றனர். கண்கொள்ளாக் காட்சி. இதேபோன்று வேலூர் மாவட்டம் காவனூர் கிராமத்திலும் அருள்மிகு அங்காளம்மன் ஊஞ்சல் சேவை பிரதி அமாவாசை நாளில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.


இந்த சேவையில் கோயில் அறங்காவலர் திரு.சஞ்சீவி ரெட்டியார் குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அம்மனின் அருள்பெற அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.


அருள்மிகு அங்காளபரமேஸ்வரி ஆலயம்,

காவனூர் கிராமம் & அஞ்சல்,

ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்,

தமிழ் நாடு.

(ஆர்க்காடு கண்ணமங்கலம் சாலையில் அமைந்துள்ளது )

1 கருத்து: